பொது

ஃபெல்டாவில் புதிய உருமாற்றத்தை அமல்படுத்த அரசாங்கம் உறுதி

14/07/2024 06:03 PM

செர்டாங், 14 ஜூலை (பெர்னாமா) -- ஃபெல்டாவில் புதிய உருமாற்றத்தை அமல்படுத்த அரசாங்கம் உறுதி கொண்டுள்ளது.

ஃபெல்டாவுடன் தொடர்புடைய அனைத்து நிறுவனங்களுடன் இணைந்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படவிருப்பதாக துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மட் சாஹிட் ஹமிடி தெரிவித்தார்.

புறநகர் மற்றும் வட்டார மேம்பாட்டு அமைச்சு KKDW-இன் ஆதரவோடு அடுத்த ஆண்டு ஃபெல்டா குடியிருப்பு மக்களின் தினத்தை முன்னிட்டு கண்காட்சி ஒன்றை நடத்தவிருப்பதாகவும் அதில் ஏறக்குறைய 20 லட்சம் பேர் வரை கலந்து கொள்வார்கள் என தாம் எதிர்பார்ப்பதாக KKDW-இன் அமைச்சருமான சாஹிட் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு KKDW ஏற்பாட்டில் ஒன்பதாவது முறையாக நடைபெற்ற புறநகர் தொழில்முனைவோர் கண்காட்சியில்  தமது தரப்பு பெற்ற பரந்த அனுபவமே இவ்விழாவை நிர்வகிக்க ஊக்குவித்துள்ளதாகவும் சாஹிட் கூறினார்.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)