உலகம்

பேங்காக் தங்கும் விடுதியில் அறுவரின் சடலங்கள் மீட்பு

17/07/2024 07:24 PM

பேங்காக், 17 ஜூலை (பெர்னாமா) -- ரட்ச பிராசோங் பகுதியில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் மூன்று ஆண்கள் மற்றும் மூன்று பெண்கள் உட்பட அறுவரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன.

அவர்களில் இருவர் வியட்நாமிய அமெரிக்கர்கள் என்றும் நால்வர் வியட்னாமியர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து உடனடியாகவும் முழுமையாகவும் விசாரணை மேற்கொள்ளவும், பொதுமக்களுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் பாதகமான பாதிப்புகள் அல்லது ஆபத்து ஏற்படாதவாறு நிலைமையைக் கட்டுப்படுத்துமாறும் போலீஸ் படைத் தலைவர் டோர்சக் சுக்விமோலுக்கு அறிவுறுத்தியுள்ளதாக தாய்லாந்து பிரதமர் ஸ்ரேட்டா தவிசின் தெரிவித்தார்.

அச்சடலங்கள் அந்நாட்டு நேரப்படி மாலை மணி 4.30-க்கு கண்டெடுக்கப்பட்டதாக ஸ்ரேட்டா கூறினார்.

அவர்களிடம், அதிர்ச்சி அல்லது கொள்ளையடிக்கப்பட்டதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லாததால், விஷம் அருந்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

மேலும், அவர்கள் 24 மணி நேரத்திற்குள் இறந்திருக்கலாம் என்று போலீசாரின் பூர்வாங்க விசாரணையில் தெரிய வந்துள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)