கிள்ளான், ஜூலை 17 (பெர்னாமா) -- கல்விக் கேள்விகளில் பின்தங்கிய மாணவர்களுக்கு அரசாங்க உயர்க்கல்விக் கூடங்களில் இணைவதற்கான வாய்ப்பு 'கானல் நீர்' என்ற கூற்றை மடானி அரசாங்கம் பொய்யாக்கியுள்ளது.
எஸ்பிஎம் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள், அரசாங்க கல்லூரிகளில் பயில்வதற்கான நேர்முக தேர்வில் கலந்து கொள்வதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நேர்க்காணல் இம்மாதம் 20ஆம் தேதி காலை மணி 9 .00 தொடங்கி பிற்பகல் மணி 1.00 வரையில் தாமான் செந்தோசா, எம்.பி.கே. மண்டபத்தில் நடைபெறும்.
இந்நிகழ்ச்சியில் ஐஎல்பி, ஐபிகேஎன், சமூக கல்லூரி, எஸ்டிடிசி, இளைஞர் கோல்ஃப் கல்லூரி உட்பட 9 கல்லூரிகளின் விரிவுரையாளர்கள் மாணவர்களுக்கு ஆலோசனைகளையும் வழிகாட்டியையும் வழங்குவர் என்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினரான டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் தெரிவித்தார்.
தகுதியான மாணவர்களுக்கு கல்லூரியில் சேர்வதற்கான கடிதங்கள் அன்றைய தினமே வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இந்த வாய்ப்பை இந்திய மாணவர்கள் நன்முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்ட குணராஜ், https://bit.ly/JomKolejKerajaan என்ற அகப்பக்கத்தின் வாயிலாக பதிவு செய்யுமாறு மாணவர்களுக்கு அவர் ஆலோசனை வழங்கினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)