பொது

ஜாலூர் கெமிலாங்கை பறக்கவிடும் நிகழ்ச்சி - 5,000 பேர் வருகை

21/07/2024 06:29 PM

சைபர்ஜெயா, 21 ஜூலை (பெர்னாமா) -- 2024 தேசிய மாதத்தின் துவக்க விழாவோடு, ஜாலூர் கெமிலாங்கை பறக்கவிடும் நிகழ்ச்சிக்கு இதற்கு முன்னர் நிர்ணயிக்கப்பட்ட இலக்கைக் காட்டிலும், சுமார் 5 ஆயிரம் பேர் வருகைப் புரிந்துள்ளனர்.

இன்று காலையில் தொடங்கிய இவ்விழாவிற்கு மக்களின் அமோக ஆதரவு கிடைத்துள்ள வேளையில், சுமார் எட்டாயிரம் பேர் திரண்டதாக, மலேசிய தகவல் துறை JaPen-இன் மூத்த இயக்குநர் நைம் ஃபஹ்மி அஹமட் தஜுடின் கூறினார்.

2013 ஆம் ஆண்டு முதல் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இந்நிகழ்ச்சி 11 முறை ஏற்பாடு செய்யப்பட்டது.

இவ்வாண்டு 12வது முறையாக இந்நிகழ்ச்சி நடத்தப்படுவதாக நைம் ஃபஹ்மி கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)