பொது

விமான நிலைய நடைமுறைகள், தகவல் தொடர்பு அமைப்புகள் குறித்த விவகாரங்களை மேம்படுத்த ஆலோசனை

23/07/2024 05:55 PM

நீலாய், 23 ஜூலை (பெர்னாமா) -- தொழில்நுட்பக் கோளாரினால், கடந்த வாரம் விமான நிலையத்தில் ஏற்பட்ட தாமதத்தைத் தொடர்ந்து, விமான நிலையத்தில் உள்ள நடைமுறைகள் மற்றும் தகவல் தொடர்பு அமைப்புகள் குறித்த சில விவகாரங்களை மேம்படுத்தலாம் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.

எதிர்பாரா விதமாக ஏற்பட்ட இந்த இடையூறினால் பல துறைகள் பாதிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

செவ்வாய்க்கிழமை, நெகிரி செம்பிலான் நீலாயில் உள்ள மந்தின் தேசிய இடைநிலைப் பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்ட தொழில்நுட்பக் கல்வி மற்றும் தொழில் பயிற்சி,டிவெட் தொடர்பான நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தப் பின்னர், அந்தோணி லோக் செய்தியாளர்களிடம் பேசினார்.

தொழில்நுட்பக் கோளாரினால், சில விமானப் பயணங்களும் இரத்து செய்யப்பட்டன.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)