ஜோகூர் பாரு, 23 ஜூலை (பெர்னாமா) -- கடந்த சனிக்கிழமை இஸ்கண்டார் புத்ரியில் உள்ள ஒரு பேரங்காடியில் காணாமல் போன ஆறு வயது சிறுமி தொடர்பான வழக்கில் இறுதியாக கைது செய்யப்பட்ட நபர் இன்று தொடங்கி ஏழு நாள்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
திங்கட்கிழமை வரையிலான அந்த 31 வயதுடைய ஆடவருக்கான தடுப்புக் காவல் உத்தரவை மஜிஸ்திரேட் முஹமட் ஃபித்ரி மொக்தார் பிறப்பித்தார்.
இன்று அதிகாலை மணி 4.45-க்கு சிலாங்கூர், பத்தாங் காலி அருகே உள்ளஒரு மலிவு விலை தங்கும் விடுதியில் கைதான அவ்வாடவர் இன்று மாலை மணி மூன்றுக்கு ஜோகூர் பாரு நீதிமன்ற வளாகத்திற்கு கொண்டு வரப்பட்டார்.
இவ்வழக்கில் தொடர்புடைய 28-இல் இருந்து 55 வயதிற்குட்பட்ட நால்வர் இன்று தொடங்கி வெள்ளிக்கிழமை வரை நான்கு நாள்களுக்கு முன்னதாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
-- பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]