பொது

மண்ணெண்ணெய் எரிபொருள் காணாமல் போன விவகாரம்; அறுவர் விடுவிப்பு

24/07/2024 07:09 PM

கோலாலம்பூர், ஜூலை 24 (பெர்னாமா) -- அரச மலேசிய போலீஸ் விமானப் படையின் தீபகற்ப விமான தளத்தில் JET-A1 ரக மண்ணெண்ணெய் எரிபொருள் காணாமல் போனது தொடர்பில் கைது செய்யப்பட்ட ஆறு சந்தேக நபர்கள் இன்று போலீஸ் உத்தரவாதத்தின் பேரில் விடுவிக்கப்பட்டனர்.

கடந்த ஜூலை 15-ஆம் தேதி நிகழ்ந்த அச்சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கையை போலீஸ் நிறைவு செய்துவிட்டதாகவும் சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹுசேன் ஒமார் கான் தெரிவித்தார்.

"கடந்த ஜூலை 15-ஆம் தேதி நிகழ்ந்த அச்சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கையை போலீஸ் நிறைவு செய்துவிட்டது,'' என்றார் அவர்.

தொடர் நடவடிக்கைக்காக கூடிய விரைவில் அரசு தரப்பு வழக்கறிஞரிடம் விசாரணை அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு முன்னர், வங்கி தரப்பிடமிருந்து சில ஆவணங்களுக்கு, பிடிஆர்எம் காத்திருப்பதாகவும்  பெர்னாமா தொடர்புக் கொண்டபோது அவர் கூறினார்.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)