காத்மாண்டு, 24 ஜூலை (பெர்னாமா) -- காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் அனைத்துலக விமான நிலையத்தில் இன்று உள்நாட்டு விமானம் விபத்துக்குள்ளானதில் மொத்தம் 22 பேர் உயிரிழந்தனர்.
விமானி மட்டுமே ஒருவர் உயிர் பிழைத்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக நேபாள பொது விமானப் போக்குவரத்து ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் ஹன்சா ராஜ் பாண்டே தெரிவித்தார்.
இச்சம்பவத்தினால், திரிபுவன் அனைத்துலக விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
மற்றொரு விமானத்தை சரிசெய்வதற்காக சௌர்யா ஏர்லைன்ஸ் விமானம் இரண்டு பணியாளர்கள் மற்றும் 17 தொழில்நுட்ப வல்லுநர்களை ஏற்றிக்கொண்டு போக்ரா நகருக்கு பயணித்துக் கொண்டிருந்தபோது, அவ்விபத்து நிகழ்ந்தது.
உள்ளூர் நேரப்படி காலை மணி 11 அளவில், அச்சம்பவம் நிகழ்ந்தது.
விமானம் ஓடுபாதைக்கு சற்று மேலே பறப்பதையும், அது விபத்துக்குள்ளாகும் முன் சாய்வதையும், தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)