பொது

உல்லாசக் கப்பல்களை ஈர்க்க துறைமுகங்கள் மேம்படுத்தப்படும்

29/07/2024 09:27 PM

புத்ராஜெயா, 29 ஜூலை (பெர்னாமா) -- உல்லாசக் கப்பல்களை அதிகம் ஈர்க்கும் வகையில் நாட்டில் உள்ள சில துறைமுகங்கள் மேம்படுத்தப்படும். 

மலேசியாவிற்கு அதிகமான சுற்றுப் பயணிகளைக் கவர்வதற்கும் உல்லாசக் கப்பல் துறையின் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கும் இம்முயற்சி முன்னெடுக்கப்படுவதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் கூறினார்.   

இந்த முன்னெடுப்பின் வழி, அதிகமான உல்லாசக் கப்பல் நிறுவனங்களைக் கவர முடியும் என்பதோடு மலேசியாவை ‘homeport’ எனப்படும் வீட்டுத் துறைமுகம் எனும் அந்தஸ்தையும் பெறச் செய்ய முடியும் என்று லோக் நம்பிக்கை தெரிவித்தார்.

கொவிட்-19 பெருந்தொற்றுக்கு பின்னர் உல்லாசக் கப்பல் துறை மலேசியாவில் நன்கு வளர்ச்சியடைந்து வருவதையும் அவர் குறிப்பிட்டார். 

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]