ஜோகூர் பாரு, 25 ஜூலை (பெர்னாமா) -- ஜூன் 21-ஆம் தேதி தொடங்கி கடந்த ஞாயிற்றுக்கிழமை வரையில் ஜோகூர் போலீசார் மேற்கொண்ட OPS LEJANG சோதனை நடவடிக்கையின் வழி எண்மர் கைதானதோடு மூன்று சொகுசு வாகன திருட்டு கும்பல்கள் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டன.
தமது தரப்பினர் அங்கு மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் வாயிலாக பல்வேறு வகையான வாகனங்களைத் திருடும் எண்மர் அடங்கிய அம்மூன்று கும்பல்களை வெற்றிகரமாக கைது செய்ய முடிந்ததாக எம்.குமார் தெரிவித்தார்.
கடந்த ஆறு மாத காலமாக சொகுசு வாகனங்களைக் குறி வைத்து திருடும் நடவடிக்கையில் அக்கும்பல் ஈடுபட்டு வந்ததாக நம்பப்படுகிறது.
திருடும் வாகனங்களை அடையாளம் காண்பதற்காக, உயர் தொழில்நுட்ப உபகரணங்களை அவர்கள் பயன்படுத்துவதும் தெரியவந்துள்ளதாக குமார் கூறினார்.
''பொதுமக்கள் வழங்கிய தகவலோடு குற்றவியல் விசாரணைப் பிரிவு மேற்கொண்ட அதிரடி சோதனையின் மூலமாக அக்கும்பலின் நடவடிக்கையை முறியடிக்கப்பட்டுள்ளது''', என்றார் அவர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)