பொது

கிள்ளான் பள்ளத்தாக்கில் சீரடைந்து வரும் நீர் விநியோகம்

25/07/2024 07:52 PM

கோலாலம்பூர், 25 ஜூலை (பெர்னாமா) -- கடந்த சில நாட்களாக சீராக நீர் விநியோகமின்றி கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதியைச் சேர்ந்த பலரும் பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வந்தனர்.

இருப்பினும் இன்று மாலை நிலவரப்படி பாதிக்கப்பட்ட பல பகுதிகளில் நீர் விநியோகம் வழக்க நிலைக்குத் திரும்பியுள்ளதாக நீர் வழங்கல் நிறுவனமான ஆயிர் சிலாங்கூர் அறிவித்துள்ளது.

அதேவேளையில் இன்று இரவு எட்டு மணிக்குள் எஞ்சியுள்ள இதர பகுதிகளிலும் வழக்கம் போல நீர் சேவைக் கிடைக்கபெறும் என்று அது ஆயிர் சிலாங்கூர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

நீர் விநியோகம் குறித்த தனிப்பட்ட நபர் வெளியிடும் எவ்வித அறிக்கைகளையோ அல்லது விளம்பரங்களையோ நம்ப வேண்டாம் என்றும் பொதுமக்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

அதேவேளையில், நீர் விநியோகத் தடை, தூய்மையற்ற நீர் போன்ற பிரச்சனைகள் குறித்து பொதுமக்கள் ஆயிர் சிலாங்கூர் அலுவலகத்தை நேரடியாகவும் தொடர்பு கொள்ளலாம்.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)