பொது

இவ்வாண்டு சபாவில் மேற்கொண்டு வரும் புதிய திட்டங்கள்

25/07/2024 09:00 PM

சபா, 25 ஜூலை (பெர்னாமா) --  இவ்வாண்டு, சபாவில் தெலுபிட், லஹாட் டத்து, பியூஃபோர்ட், பிதாஸ், நபவான் மற்றும் மெரோடாய் ஆகிய இடங்களில் தீயணைப்பு நிலையத்தின் கட்டுமான பணிகள் உட்பட மேலும் பல புதிய திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு, அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

12-ஆவது மலேசிய திட்டத்தில், நான்காவது சுற்றுத் திட்டத்தின் கீழ் இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக, ஊராட்சித் துறை மேம்பாட்டு அமைச்சர் ஙா கோர் மிங் கூறினார்.

''இவ்வாண்டு, மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை, கட்டுமானம் மற்றும் உபகரணங்களை வாங்குவதற்காக, வரலாற்றிலே மிக அதிகமான ஒதுக்கீட்டைப் பெற்றுள்ளது. மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை எப்பொழுதும் தயார் நிலையில் இருப்பதை உறுதிச் செய்வதற்கான அரசாங்கத்தின் முயற்சியைக் காட்டுகின்றது'', என்றார் அவர்.  

இன்று, சபா, புட்டாட்டானில் ,இரண்டாவது துணை முதலமைச்சர் டத்தோ டாக்டர் ஜோச்சிம் குன்சலம், மூன்றாவது துணை முதலமைச்சர் டத்தோ ஷாஹெல்மி யஹ்யா மற்றும் மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் தலைமை இயக்குனர் டத்தோ ஹிஷாம் முஹமட் உடனான தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் திறப்பு விழாவில் கலந்து கொண்டு அவர் அவ்வாறு உரையாற்றினார்.  

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)