இஸ்ரேல், 28 ஜூலை (பெர்னாமா) -- நேற்று, இஸ்ரேல் கட்டுப்பாட்டிலான கோலன் ஹைட்ஸ் கால்பந்து மைதானத்தில் நடத்தப்பட்ட ராக்கெட் தாக்குதலில் சுமார் பதினொறு குழந்தைகளும் சிறார்களும் பலியானதாக இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஹெஸ்பொல்லா இத்தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேல் குற்றஞ்சாட்டியுள்ள வேளையில், ஹெஸ்பொல்லா அதை மறுத்துள்ளது.
கடந்தாண்டு அக்டோபர் மாதம் 7-ஆம் தேதி காசாவில் ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, இஸ்ரேலிய குடிமக்கள் மீது நடத்திய மிகப் பெரிய தாக்குதல் இதுவாகும் என்று இஸ்ரேல் ராணுவத்தின் தலைமை செய்தி தொடர்பாளர் ரியர் அடம். டேனியல் ஹகாரி கூறினார்.
மேலும், இத்தாக்குதலில் இருபது பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)