பொது

இரண்டாம் இணைப்பின் கீழ், 5G சேவையின் விலை நிலைத்திருப்பதை எம்சிஎம்சி உறுதிசெய்யும்

29/07/2024 04:22 PM

கோலாலம்பூர், 29 ஜூலை (பெர்னாமா) -- இரண்டாம் இணைப்பின் கீழ், 5G சேவையின் விலை, நடப்பிலுள்ள விகிதத்தில் நிலைத்திருப்பதை மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம், எம்சிஎம்சி-இன் வழி அரசாங்கம் உறுதிசெய்யும்.

அச்சேவையின் அமலாக்க மதிப்பீட்டு செயல்முறையின்போது கருத்தில் கொள்ளப்பட்ட அம்சங்களில் விலையும் அடங்கும் என்று இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.

''இக்கேள்வியில் எம்சிஎம்சி அக்கறை செலுத்துகிறது. இந்த இரண்டாவது இணைப்பு உருவாக்கப்பட்டால், நடப்பில் உள்ள விலைகளைப் பின்பற்றி விலை நிர்ணயிக்கப்படுவதை உறுதிசெய்யும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு விட்டதாக நான் நினைக்கிறேன். எம்சிஎம்சி-இன் கவனித்த ஒரு அம்சம் அதுவாகும். அதன் தொடர்பான செயல்முறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன,'' என்றார் அவர்.

இன்று, கோலாலம்பூரில், மலேசிய 5ஜி இணைப்பின் இணையப் பாதுகாப்பை அதிகரிக்க டிஜிட்டல் நேஷனல் பெர்ஹாட், டிஎன்பி  மற்றும் சைபர்செக்கியூரிட்டி மலேசியாவிற்கும் இடையிலான, ஒத்துழைப்பு ஒப்பந்த கையெழுத்திடும் நிகழ்ச்சியில் கோபிந்த் சிங் அவ்வாறு கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)