பொது

தேசிய முன்னணியின் பிரச்சாரத்திற்கு உதவ தமது கட்சி தயார் - அந்தோணி லோக்

29/07/2024 04:30 PM

கிள்ளான், 29 ஜூலை (பெர்னாமா) -- அடுத்த மாதம் கிளந்தானில் நடைபெறவிருக்கும் நெங்கிரி சட்டமன்ற இடைத் தேர்தலில் தேவையிருந்தால் தேசிய முன்னணியின் பிரச்சாரத்திற்கு உதவ தமது கட்சி தயாராக இருப்பதாக ஜசெக பொதுச் செயலாளர், அந்தோணி லோக் கூறியுள்ளார்.

பெலாங்கை சட்டமன்ற இடைத் தேர்தலின்போது கிடைத்த அனுபவத்தின் அடிப்படையில் தேசிய முன்னணி வேட்பாளருக்கான வாக்குகளை ஜசெக கவர முடிந்ததை அவர் சுட்டிக்காட்டினார்.

''எங்களின் நிலைப்பாடு எளிமையானது. தேவையிருந்தால் நாம் உதவுவோம். இல்லையென்றால் நாங்கள் அங்கு செல்ல மாட்டோம். எங்களுக்கு உண்மையிலேயே ஒருமைப்பாட்டு அரசாங்கத்தின் உணர்வு உள்ளது. பெலாங்கை சட்டமன்றத்தில் நடந்தது போல, உதவுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டால் நாங்கள் செல்வோம். ஓர் இரண்டு இடைத்தேர்தல்களில் BN வேட்பாளர்களுக்கு வாக்குகளைச் சேகரித்துள்ளோம்'', என்றார் அவர்.

இதனிடையே, B2 மோட்டார் சைக்கிள் உரிமத்தை முழு பி-க்குத் தானியங்கி முறையில் மேம்படுத்துவது தொடர்பான அமலாக்கம் குறித்த முடிவு கூடிய விரைவில் அறிவிக்கப்படும் என்று லோக் தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)