பொது

சிசிஜி பாதுகாப்பு கப்பலின் வருகையைக் கண்டு மீனவர்கள் அச்சம் கொள்ள வேண்டாம்

30/07/2024 05:01 PM

புத்ராஜெயா, 30 ஜூலை (பெர்னாமா) --  இதனிடையே, தென் சீனக் கடற்பகுதியில் சிசிஜி எனப்படும் சீனாவின் கடலோர பாதுகாப்பு கப்பலின் வருகையால் உள்நாட்டு மீனவர்கள் அச்சம் அடைந்திருப்பது குறித்து டத்தோ ஶ்ரீ அன்வாரிடம் வினவப்பபட்டது.

குறிப்பாக, பெத்திங் பத்திங்கி அலி சுற்று வட்டாரப் பகுதியில் அக்கப்பலின் வருகையைக் கண்டும் மீனவர்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என்றும் அவர் அறிவுறுத்தினார்.

தென்சீனக் கடல் பகுதியைச் சுற்றி சிசிஜி கப்பல்கள் இருப்பதால் மீனவர்கள் தங்களின் நடவடிக்கைகளை மேற்கொள்வதில் சிரமத்தை எதிர்கொள்வதால், அவர்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளதாக ஊடகங்கள் முன்னதாக செய்தி வெளியிட்டிருந்தன.

சரவாக் மீரி கடற்கரையிலிருந்து சுமார் எண்பத்து நான்கு மைல்கல் அல்லது நூற்று ஐம்பத்து ஐந்தாவது  கிலோமீட்டர் தொலைவில் பெத்திங் பத்திங்கி அலி அமைந்துள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)