உலகம்

கிழக்கு இந்தியாவில் பயணிகள் இரயில் தடம் புரண்டது

30/07/2024 06:10 PM

ஜார்க்கண்ட், 30 ஜூலை (பெர்னாமா) -- கிழக்கு இந்தியாவில் பயணிகள் இரயில் ஒன்று தடம் புரண்டதில் இருவர் உயிரிழந்தனர்.

மேலும் 20 பயணிகள் காயமடைந்தனர்.

இன்று அதிகாலை ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஃபாராபெம்பு  எனும் நகர் அருகே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

மும்பை நோக்கிச் சென்ற இந்த பயணிகள் இரயிலின் சுமார் 18 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இரயிலில் சிக்கிக் கொண்டவர்கள் மீட்கப்பட்டு அருகில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

விபத்துக்கான காரணத்தை கண்டறிய விசாரனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்தியா முழுவதும் தினமும் ஒரு கோடியே 20 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் 14,000 ரயில்களில் பயணிக்கின்றனர்.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)