பொது

நாட்டை பாதுகாக்கும் தேசிய பாதுகாப்புப் படையைப் பாராட்டிய மாமன்னர்

31/07/2024 04:43 PM

கோலாலம்பூர், 31 ஜூலை (பெர்னாமா) --  தியாகம், சேவை, மற்றும் நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்கும் அர்ப்பணிப்புக்காக தேசிய பாதுகாப்புப் படைக்கு மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் தமது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.

மாமன்னருடன் இணைந்து பேரரசியார் ராஜா சாரித் ஃசோபியாவும், மலேசிய இராணுவ படைக்கும் அரச மலேசிய போலீஸ் படைக்கும் தமது பாராட்டுகளைத் தெரிவித்திருக்கிறார்.

நேரத்தைப் பொருட்படுத்தாமல் அமைதியையும் ஒழுங்கையும் நிலைநாட்டும் இராணுவ வீரர்கள் போற்றுதலுக்கு உரியவர்கள் என்று மலேசிய இராணுவ படையின் உயர் தலைவரான சுல்தான் இப்ராஹிம் குறிப்பிட்டார்.

இன்று அனுசரிக்கப்படும் தேசிய வீரர் தினத்தை முன்னிட்டு மாமன்னர் தம்பதியினர் தங்களின் வாழ்த்துகளை முகநூலில் பதிவு செய்துள்ளனர்.

இராணுவ வீரர்களின் சேவையும் அர்ப்பணிப்பும் தொடர்ந்து போற்றப்படும் என்று மாமன்னர் கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)