டானாவ் கோதா, 31 ஜூலை (பெர்னாமா) -- இன்று காலை, கோலாலம்பூர், டானாவ் கோதாவில் உள்ள எட்டு கடைகள் தீயில் எரிந்து சாம்பலாகின.
இச்சம்பவம் தொடர்பில் தீயணைப்பு செயல்பாட்டு மையத்திற்குக் காலை மணி 7.02க்கு அவசர அழைப்பு வந்த நிலையில் தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
சிதாபாக் மற்றும் வங்சா மஜூ தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த பதினாங்கு உறுப்பினர்கள், ஒரு தீயணைப்பு இயந்திரம், அவசர உதவி சேவைக் குழுவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக தீயணைப்பு செயல்பாட்டு KOMANDER, மூத்த உதவி அதிகாரி, எம். லட்சுமணன் தெரிவித்தார்.
சம்பவ இடத்தை அடைந்தபோது அப்பகுதி நூறு விழுக்காடு தீயில் சேதமடைந்திருந்ததாக அவர் கூறினார்.
இந்தத் தீ விபத்தில் யாருக்கும் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.
தீ ஏற்பட்டதற்கான காரணம் மற்றும் சேதங்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படுகின்றது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)