புது டெல்லி, 01 ஆகஸ்ட் (பெர்னாமா) -- இந்தியாவுக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டிருக்கும் வியட்நாமியப் பிரதமர் பாம் மின் சின்னை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துள்ளார்.
இந்திய தலைநகர் புது டெல்லியில் உள்ள அதிபர் மாளிகையில் சின்னுக்கு அதிகாரப்பூர்வ வரவேற்பு வழங்கப்பட்டது.
இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகள் குறித்து அவ்விரு தலைவர்களும் கலந்துரையாடினர்.
இச்சந்திப்பில் உயர்மட்ட பேராளர்களும் வர்த்தகத் தலைவர்களும் சின் உடன் கலந்து கொண்டனர்.
இந்தோ-பசிபிக் திட்டத்தில், வியட்நாம் இந்தியாவின் முக்கிய பங்காளியாக செயல்படுவதாக இந்திய வெளியுறவு அமைச்சு வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.
மூன்று நாள்கள் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டு சின் நேற்று இந்தியா வந்தடைந்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)