சூரிகாவோ டெல் சுர், 03 ஆகஸ்ட் (பெர்னாமா) -- இன்று காலையில், தெற்கு பிலிப்பைன்ஸில் உள்ள சூரிகாவோ டெல் சுர்r பகுதியில் 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
பிலிப்பைன்ஸ் எரிமலை, நிலநடுக்க ஆய்வுக் கழகம் அதனை உறுதிப்படுத்தியது.
உள்ளூர் நேரப்படி காலை மணி 6.22 அளவில் கடலோர நகரமான லிங்கிக்கில் இருந்து வடகிழக்கே 66 கிலோமீட்டர் தொலைவில் ஒன்பது கிலோமீட்டர் ஆழத்தில் அந்நிலநடுக்கம் ஏற்பட்டது.
மின்டானாவில் உள்ள அகுசன் டெல் சுர், தாவோ டி ஓரோ, டாவோ சிட்டி, டாவோ ஆக்சிடென்டல் மற்றும் மத்திய பிலிப்பைன்ஸின் சில பகுதிகளும் அதன் தாக்கம் உணரப்பட்டது.
தெக்டோனிக் எனப்படும் அந்த மேலோட்ட இயக்க நிலநடுக்கம் பின்அதிர்வுகளையும் ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், எவ்வித சேதமும் ஏற்படவில்லை.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ) 502