பொது

மகோத்தா சட்டமன்றம் காலியானது குறித்து எஸ்.பி.ஆர்-இடம் அறிவிக்கப்பட்டது

04/08/2024 03:43 PM

ஜோகூர், 04 ஆகஸ்ட் (பெர்னாமா) --  மகோத்தா சட்டமன்றத் தொகுதி காலியானது குறித்து ஜோகூர் மாநில சட்டமன்ற சபாநாயகர் டத்தோ டாக்டர் முஹமட் புவாட் சர்காஷி, இன்று காலை தேர்தல் ஆணையம், எஸ்.பி.ஆர்-இடம் தெரிவித்தார்.

அச்சட்டமன்ற உறுப்பினர் டத்தோ ஷரிஃபா அசிசா சைட் செயின் கடந்த வெள்ளிக்கிழமை காலமானதைத் தொடர்ந்து, இது குறித்து எஸ்.பி.ஆர்-இடம் தெரிவிக்கப்பட்டது.

ஜோகூர், குளுவாங்கில் உள்ள என்சே’ பெசார் ஹஜ்ஜா கல்சோம் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த டத்தோ ஷரிஃபா அசிசா சைட் செயின் சிகிச்சைப் பலனின்றி கடந்த வெள்ளிக்கிழமை நண்பகல் மணி 12.32க்கு உயிரிழந்தார்.

மூச்சுத் திணறல் ஏற்பட்டதை அடுத்து கடந்த புதன்கிழமை அம்மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில், ஜோகூர் மாநில அம்னோ முன்னாள் மகளிர் பிரிவுத் தலைவியுமான அவர் அனுமதிக்கப்பட்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)