பொது

சேன் ராயன் தம்பியை பராமரிக்கும் தற்காலிக உரிமை, பாட்டிக்கு

09/08/2024 08:45 PM

ஷா ஆலம், 9 ஆகஸ்ட் (பெர்னாமா) -- சேன் ராயன் அப்துல் மாத்தினின் தம்பியின் தற்காலிக பராமரிப்புக்கான உரிமை, அவரது உறவினர் பாட்டியிடம் வழங்க, ஷா ஆலம் மஜிஸ்திரெட் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியது.

இன்று தொடங்கி, இரண்டு மாதங்களுக்கு அச்சிறுவன் அவரின் பராமரிப்பில் இருப்பான்.

சிலாங்கூர் சமூக நலத் துறை மற்றும் சேன் ராயனின் குடும்பத்தைப் பிரதிநிதிக்கும் வழக்கறிஞர் நூருல் இக்ரிமா முஹமட் ராயா ஆகியோர் ஆஜரான வழக்கு விசாரணையின்போது, மஜிஸ்திரெட் முஹமட் ஷஃபிக் சுலைமான் அந்த முடிவை அறிவித்தார்.

குழந்தையின் பெற்றோர்கள் தங்கள் குழந்தையை வாரத்திற்கு ஒரு முறை பார்க்க அனுமதிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் நிபந்தனை விதித்தது.

ஆனால், நிர்ணயிக்கப்பட்ட பாதுகாவலரின் பராமரிப்பில் இருக்கும் அச்சிறுவனை எட்டு மணி நேரத்திற்கு மேல் சந்திக்கக் கூடாது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)