பொது

பலகை வீட்டில் ஏற்பட்ட தீயில் 8 வயது சிறுவன் கருகி மாண்டான்

22/08/2024 08:06 PM

லாஹாட் டத்து, 22 ஆகஸ்ட் (பெர்னாமா) -- சபா, லாஹாட் டத்து, கம்போங் தெலிசாய்யில் உள்ள பலகை வீடொன்றில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி எட்டு வயது சிறுவன் ஒருவன் கருகி மாண்டான். 

அவ்வீட்டின் அறையில் முஹமட் காலிஷ் அப்துல் ஜுமயின் எனும் அச்சிறுவனின் கருகிய நிலையில் இருந்த உடலை தீயணைப்பு உறுப்பினர்கள் கண்டெடுத்ததாக லாஹாட் டத்து மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தலைவர் சும்சொவா ரஷிட் தெரிவித்தார். 

இச்சம்பவம் குறித்து தமது தரப்பிற்கு இரவு மணி 9.46-க்கு அவசர அழைப்பு கிடைத்ததாகவும், பட்டணத்திலிருந்து சுமார் 55 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் அக்குடியிருப்புப் பகுதிக்கு 15 உறுப்பினர்கள் தீயணைப்பு வாகனத்துடன் விரைந்ததாகவும் சும்சொவா கூறினார்.  

நள்ளிரவு மணி 12.45-க்கு தீ முற்றிலுமாக அணைக்கப்பட்ட நிலையில் இச்சம்பவம் ஏற்பட்டதற்கான காரணம் குறித்து இன்னும் விசாரிக்கப்பட்டு வருகிறது. 

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]