செபெராங் பிறை, 22 ஆகஸ்ட் (பெர்னாமா) -- சுற்றுவட்டாரங்களில் உள்ள உணவங்களில் மேற்கொள்ள சோதனை நடவடிக்கையின் வழி, பல்வேறு விதிமுறைகளை மீறியதற்காக 11 வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
தங்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குடிநுழைத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சோதனையில் முறையான வேலை பெர்மிட் இல்லாதது, ஆவணங்கள் இல்லாதது, மற்ற தொழில்துறைக்கு வழங்கப்பட்ட பெர்மிட்டில் வேலை செய்தல் ஆகிய குற்றங்களின் அடிப்படையில் 11 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
25 முதல் 40 வயதிற்குட்ட அவர்களில் அறுவர் வங்காளதேசத்தையும் மூவர் நேபாளத்தையும், இருவர் நேபாளத்தையும் சேர்ந்தவர்களாவர்.
1953ஆம் ஆண்டு குடிநுழைவுச் சட்டம் மற்றும் 1963ஆம் ஆண்டு குடிநுழைவு விதுமுறைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அவர்கள் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)