பொது

பள்ளிகள் சிறந்த சூழலில் இருப்பதை எப்போதும் உறுதி செய்வேன் - பிரதமர்

11/08/2024 05:11 PM

கோலாலம்பூர், 11 ஆகஸ்ட் (பெர்னாமா) -- நாடு தழுவிய அளவில் உள்ள அனைத்து பள்ளிகளும் எப்போதும் சிறந்த நிலையில் உள்ளதை தாம் தொடர்ந்து உறுதி செய்வதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

இதன் மூலமாக மாணவர்கள் கல்வியில் முழு கவனம் செலுத்த முடியும் என்று தமது முகநூலில் பிரதமர் பதிவிட்டுள்ளார்.

மேலும், பகாங், குவாந்தானில் உள்ள சுல்தானா ஹாஜா கால்சோம் இடைநிலைப்பள்ளியின் வசதிகளை அன்வாரின் அரசியல் செயலாளர் அஹ்மட் ஃபர்ஹான் ஃபவுசி பார்வையிட்டது தொடர்பான புகைப்படங்களும் முகநூலில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.  

அண்மையில், குவாந்தான், இண்ட்ரா மக்கோத்தாவிற்கு மேற்கொண்ட பயணத்தின் போது, தம்மை பிரதிநிதிக்கும் வகையில் இக்கண்ணோட்டத்தை அவர் மேற்கொண்டதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

அக்கண்ணோட்டத்தின் போது மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் ஆகியோரோடும் அவர் கலந்துரையாடினார்.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)