பொது

ஜோகூர், மக்கோத்தா இடைத்தேர்தலில் களமிறங்கும் தே.மு வேட்பாளர்

13/08/2024 06:40 PM

கோலாலம்பூர், 13 ஆகஸ்ட் (பெர்னாமா) --  ஜோகூர், மக்கோத்தா தொகுதியின் சட்டமன்ற இடைத்தேர்தலில் ஒருமைப்பாட்டு அரசாங்கத்தைப் பிரதிநிதித்து தேசிய முன்னணி வேட்பாளர் களமிறங்கவுள்ளார்.

வழக்கம் போல மாநில சட்டமன்றம் அல்லது நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட கட்சியே மீண்டும் போட்டியிடும் என்று துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மட் சாஹிட் ஹமிடி தெரிவித்தார்.

"மஹ்கோத்தா தொகுதியில் தேசிய முன்னணி தொடர்ந்து வெற்றிப் பெறக்கூடிய சாத்தியம் உள்ளது என்பது எங்களுக்குத் (தே.மு) தெரியும். நிச்சயமாக, ஒருமைப்பாட்டு அரசாங்கத்தில் நாங்கள் அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒருங்கிணைக்க விரும்புகிறோம்", என்று அவர் கூறினார்.

இன்று, கோலாலம்பூரில், SME Corp எனப்படும், சிறு மற்றும் நடுத்தர அமைப்புகளின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவன மன்றத்தின் செயல்குழு கூட்டத்தில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் டாக்டர் அஹ்மட் சாஹிட் இத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)