புத்ராஜெயா, 14 ஆகஸ்ட் (பெர்னாமா) -- கடந்த ஆண்டு ஆகஸ்ட் 17-ஆம் தேதி, சிலாங்கூர், ஷா ஆலம், பண்டார் எல்மினாவில் 10 பேரின் உயிரைப் பறித்த விமான விபத்து தொடர்பான இறுதி அறிக்கை இன்னும் ஓரிரு நாட்களில் வெளியிடப்படும்.
விபத்து நிகழ்ந்து ஓராண்டு நிறைவடைவதற்கு முன்னரே, இன்னும் சில தினங்களில் அவ்வறிக்கை வெளியிடப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.
''எல்மினா விமான விபத்து அறிக்கை வெளியிடப்படும் என நினைக்கிறேன். இன்னும் ஓரிரு நாட்களில் என்று நினைக்கிறேன். ஓராண்டு நிறைவடைவதற்குள். நிச்சயமாக விரைவில் வெளியிடப்படும்,''' என்றார் அவர்.
அவ்விமான விபத்து தொடர்பான பூர்வாங்க அறிக்கையை, கடந்த ஆண்டு செப்டம்பர் 15-ஆம் தேதி போக்குவரத்து அமைச்சின் விமான விபத்து புலனாய்வுப் பிரிவு AAIB, வெளியிட்டது.u.
லங்காவி அனைத்துலக விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட 'BEECHCRAFT' ரக விமானம், சுபாங் விமான நிலையத்தை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்த போது, விபத்துக்குள்ளானது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ) 502