புத்ராஜெயா,18 ஆகஸ்ட் (பெர்னாமா) -- தாய்லாந்தின் இளம் வயது பிரதமர் மற்றும் மரியாதைக்குரிய பதவியை வகிக்கும் இரண்டாவது பெண் என்ற வரலாற்றைப் படைத்திருக்கும் தாய்லாந்தின் பிரதமராக நியமிக்கப்பட்ட பேடோங்டார்ன் சினவத்ராவுக்கு பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
நெருங்கிய அண்டை நாடுகளாக மலேசியாவும் தாய்லாந்தும் நிலையான உறவைப் பகிர்ந்து கொள்வதோடு வரலாறு, கலாச்சார மற்றும் பொருளாதார உறவுகள் உட்பட ஆழமான சகோதரத்துவத்துடன் இருப்பதாக அன்வார் கூறினார்.
தென் தாய்லாந்தில் அமைதி மற்றும் மேம்பாட்டைப் பின் தொடர்வதன் வழி, மலேசியா மற்றும் தாய்லாந்தின் ஒத்துழைப்பு, இரு நாடுகளின் எல்லைப்பகுதியில் மக்களுக்கு நன்மைகளை ஏற்படுத்துவதாக அன்வார் தமது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மலேசியா தாய்லாந்திற்கு இடையிலான இருவழி உறவின் முழு வாய்ப்பையும் உருவாக்க பேடோங்டார்னுடன் நெருக்கமான ஒத்துழைப்பை மேற்கொள்ள முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)