கோலாலம்பூர், 20 ஆகஸ்ட் (பெர்னாமா) -- ஜோகூர் பாருவில் RAPID TRANSIT SYSTEM LINK, RTS ரயில் சேவைத் திட்டத்திற்கான கட்டமைப்பு பணிகள் 83 விழுக்காடு வரை முன்னேற்றம் கண்டுள்ளது.
2027ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் தேதி செயல்படுத்த திட்டமிடப்பட்டிருக்கும் RTS சேவையின் கட்டுமான பணிகள் அட்டணையின் படி மேற்கொள்ளப்படுவதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.
புக்கிட் சாகாரில் சுங்கத்துறை, குடிநுழைவு மற்றும் தனிமைப் படுத்துவதற்கான சோதனை மையம், C-I-Q-வின் கட்டுமானமும் திட்டமிட்டபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இன்று கோலாலம்பூரில் நடைபெற்ற வாகன நிறுத்துமிட விற்பனை ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர், செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் இத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
-- பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]