பொது

செய்தி சேகரிப்பதில் ஊடக நிறுவனத்திற்கு தடை விதிக்க வேண்டாம் - பிரதமர்

23/08/2024 07:57 PM

புத்ராஜெயா, 23 ஆகஸ்ட் (பெர்னாமா) -- செய்தி சேகரிப்பதில் எந்தவொரு ஊடக நிறுவனத்திற்கும் தடை விதிக்க வேண்டாம் என்று அரச மலேசிய போலீஸ் படைக்கு, பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் உத்தரவிட்டுள்ளார்.

இவ்விவகாரம் குறித்து அரச மலேசிய போலீஸ் படை நிர்வாகத்திற்குத் தாமே தொடர்பு கொண்டு பேசவிற்பதாக பிரதமர் கூறினார்.

"ஊடகங்கள் குறித்து குறிப்பாக மலேசியா கீனி ஊடகத்திற்கு ஏற்பட்டதை போல மற்ற ஊடகங்களுக்கு எந்தத் தடையும் ஏற்படாதவாறு உடனடியாக அரச மலேசிய போலீஸ் படையைத் தொடர்பு கொள்ள இருக்கிறேன்", என்று அவர் கூறினார்.

இன்று, உள்நாட்டு வாணிப மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சின் அமலாக்க அதிகாரிகளுடனான சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் அவர் செய்தியாளர்களிடம் அவ்வாறு கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)