பொது

காணாமல் போன 39 வயது ஆடவர் இன்று சடலமாக மீட்பு

27/08/2024 07:50 PM

குவாந்தான், 25 ஆகஸ்ட் (பெர்னாமா) --   நேற்று, குவாந்தான், பகாங்கில் காணாமல் போன 39 வயதுடைய ஆடவர் ஒருவரை, இன்று பெகான் கம்போங் பாசிர் பஞ்சாங் தண்ணீர் தொட்டியின் அருகில் உள்ள பகாங் ஆற்றில் சடலமாக மீட்டெடுத்தனர்.

இன்று காலை 9.35 மணியளவில், பலியான முஹமட் சுஃபியான் அபு பகார் ஆற்றில் மிதப்பதை அப்பகுதியில் உள்ள மக்கள் பார்த்ததாக, பெகான் மாவட்ட போலீஸ் தலைவர் முஹமட் சைடி மாட் சின் கூறினார். 

மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்பு துறையின் உதவியுடன் சம்பந்தப்பட்டவரின் உடலை பெகான் மருத்துவமனையின் தடயவியல் பிரிவுக்குப் போலீஸ் கொண்டு சென்றதாக அவர் தெரிவித்தார்.

அவ்வாடவர் அணிந்திருந்த உடை உட்பட அவரின் உடலில் காணும் அடையாளங்களைக் கொண்டு தனது சகோதரி அச்சடலத்தை அடையாளம் கண்டதை அவர் உறுதிப்படுத்தினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)