பொது

கோத்தா பாருவில் சதுப்பு நிலத்தில் முதியவரின் சடலம் மீட்பு

01/09/2024 06:32 PM

கோத்தா பாரு, 01 செப்டம்பர் (பெர்னாமா) --  கோத்தா பாரு, கம்போங் பேத்தா ஹுலு நீலாம் புரி கெத்தேரேவில் இன்று காலை சுமார் 10 மணிக்கு சதுப்பு நிலத்தில் 65 வயதுடைய முதியவர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பில் அழைப்பு கிடைத்ததும் ஒன்பது உறுப்பினர்களுடன் தங்கள் தரப்பு சம்பவ இடத்திற்கு விரைந்ததாக கெத்தேரே தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய நடவடிக்கை பிரிவு கொமாண்டர் ஹஸ்ரி ஹுசேன்  தெரிவித்தார்.

ஃபக்ருராசி மாமத் எனும் அம்முதியவரின் உடலை பொது மக்கள் கண்டுபிடித்ததாக ஹஸ்ரி கூறினார்.

கெத்தேரே,  கம்போங் பெளுகார் பேத்தா ஹுலுவில் வசித்த வந்த அம்முதியவர் தமக்குச் சொந்தமான தோட்டத்திற்குச் சென்ற வேளையில், நேற்று மாலை மணி 6.30 முதல் வீடு திரும்பவில்லை.

பின்னர், போலீஸ் புகார் அளிக்கப்பட்டதோடு அவரின் குடும்பத்தினரும் கிராம மக்களும் தேடல் நடவடிக்கையில் ஈடுபட்டபோது ஃபக்ருராசி மாமத்  உடல் தோட்டத்தில் உருவாக்கப்பட்டிருந்த சதுப்பு நிலத்தில் கண்டெடுக்கப்பட்டது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)