விளையாட்டு

கிரிஸ்டியானோ ரோனால்டோ வரலாற்று சாதனை; கொண்டாடும் அல்-நசிர் அணி

14/09/2024 07:49 PM

ரியாத், 14 செப்டம்பர் (பெர்னாமா) -- சவூதி புரோ லீக் ஆட்டத்தில் அல்-அலிக்கு எதிரான போட்டியில் கிரிஸ்டியானோ ரோனால்டோ தமது தொள்ளாயிரத்தாவது கோலை அடித்து வரலாற்று சாதனை படைத்து அல்-நசிர் அணியால் கொண்டாடப்பட்டார்.

அண்மையில், குரோஷியாவுக்கு எதிராக போர்த்துகல் நாடுகளின் லீக் போட்டியில், 39 வயது போர்த்துகலின் நட்சத்திர விளையாட்டாளரான அவர் வரலாற்று சாதனை படைத்தார்

அல்-நசிர் அணிக்குத் திரும்பிய ரோனால்டோவுக்கு, 'Goat' என்று எழுதப்பட்டு 900 என்ற எண் பொறிக்கப்பட்ட ஜெர்சி ஒன்று வழங்கப்பட்டது.

விளையாட்டு உலகில் சமீபக்காலங்களாக வெற்றியை நிலைநாட்டி வரும் ரோனால்டோ, வெற்றிக் குறித்து தமது வாழ்க்கையில் மேலும் பல கனவுகளைக் கொண்டிருப்பதாக கூறினார்.

இதனிடையே, ஐந்து முறை பெலன் டோர் (Ballon d'Or) விருது வென்ற ரோனால்டோ, விளையாட்டு துறையிலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்னர், தமது 1,000-த்தாவது கோலை அடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுவதாக, போர்த்துகல் தேசிய அணியின் பயிற்சியாளர் ரொபெர்ட்டோ மர்ட்டினெஸ் மற்றும் மத்திய ஆட்டக்காரரான ருபன் நெவஸ் நம்பிக்கை தெரிவித்தனர்.

ரோனால்டோவின் இச்சாதனை, தாம் இணைந்த அணியில் அவர் சிறப்பாக செயல்பட்டதற்கான சான்றாக உள்ளது.

ரியல் மெட்ரிட் அணிக்கு 450 கோல்கள், மென்செஸ்டர் யுனைடெட் அணிக்கு 145 கோல்கள், போர்த்துகல் அணிக்கு 131 கோல்கள், யுவெந்தஸ் அணிக்கு 101 கோல்கள், அல்-நசிர் அணிக்கு 68 கோல்கள் மற்றும் Sporting சி.பி அணிக்கு 5 கோல்கள் என்ற கோல் கணக்கில் அவர் வெற்றியைத் தன்வசமாக்கிக் கொண்டார்.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]