உலகம்

மியன்மாரில் யாகி சூறாவளிக்கு பலியானோரின் எண்ணிக்கை 226 ஆக அதிகரிப்பு

17/09/2024 05:53 PM

மியன்மார், 17 செப்டம்பர் (பெர்னாமா) -- மியன்மாரில் வீசிய யாகி சூறாவளியினால், அந்நாட்டில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 226 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது.

வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொலை தொடர்பு சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் நய்பிதாவ் சுற்றி, நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட பகுதிகளை அதிகாரிகள் பார்வையிட்டனர்.

சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால், உதவிப் பொருட்களை அனுப்புவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த ஆண்டு ஆசியாவைத் தாக்கிய வலிமையான சூறாவளியாக, யாகி சூறாவளி கருதப்படுகிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)