பொது

டோல் சாவடி பாதுகாவலருடன் சண்டையில் ஈடுபட்ட ஆடவர்

01/10/2024 07:26 PM

ஜோகூர் பாரு, 01 அக்டோபர் (பெர்னாமா) --   ஜோகூரில் உள்ள பெர்லிங் பிளாசா டோல் சாவடியில் தமது அடையாள அட்டையுடன் இணைக்கப்பட்டிருந்த Touch n Go சேவை பயன்படுத்த முடியாததால், கோபமடைந்த ஆடவர் ஒருவர் டோல் சாவடியின் பாதுகாவலருடன் சண்டையில் ஈடுபட்டுள்ளார். 

அவ்விருவரும் ஒருவரையொருவர் குத்திக் கொள்வதும் பொதுமக்கள் இடைமறைத்து சண்டையைத் தடுப்பது போன்ற, இரண்டு நிமிடம் 19 வினாடி கொண்ட காணொளி தொகுப்பு ஒன்று X தளத்தில் பகிரப்பட்டு வந்துள்ளது. 

இதனிடையே, நேற்று காலை சுமார் 10.11 மணியளவில், 30 வயதுடைய அவ்விரு உள்ளூர் ஆடவர்களிடமிருந்து புகார் கிடைத்ததை, வட ஜோகூர் பாரு மாவட்ட போலீஸ் தலைவர் உதவி கமிஷ்னர் பல்வீர் சிங் மஹின்டர் சிங் உறுதிப்படுத்தினார்.

குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 160-இன் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படுகின்றது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை அல்லது ஆயிரம் ரிங்கிட் வரையிலான அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம். 

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)