பொது

ஊடக்துறையில் ஒரு தொழில் வாய்ப்பாக, பெர்னாமா செய்தி நிறுவனம்

11/10/2024 07:56 PM

கோலாலம்பூர், 11 அக்டோபர் (பெர்னாமா) -- நாளை நடைபெறவிருக்கும் Satu Pemimpin, Satu Kampung மடானி நிகழ்ச்சியின் மூலம், கம்போங் பத்து லவூட்,  தன்சோங் செபாட் மற்றும் சிப்பாங் சமூகத்தினரிடம் ஊடக்துறையை ஒரு தொழில் வாய்ப்பாக, பெர்னாமா செய்தி நிறுவனம் அறிமுகப் படுத்தவிருக்கிறது. 

திறன்களை மேம்படுத்தவும், திறமைகளை வெளிக்கொணரவும், தொடர்புடைய துறைகளில் அவர்களின் திறனை முன்னிலைப்படுத்தவும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்துவதுடன், ஊடக அனுபவத்தை குறித்து அவர்களிடம் பெர்னாமா செய்தி நிறுவனம் பகிர்ந்து கொள்ளவிருப்பதாக, பெர்னாமாவின் தலைமை செயல்முறை அதிகாரி நூருல் அஃபிடா கமாலுடின் கூறினார்.

கிராமப்புற மக்களின் திறனை அங்கீகரிக்கும் வகையில் இந்நிகழ்ச்சியின் மூலம் அரசாங்கத்தின் இலக்கை தமது தரப்பு உறுதிக் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.  

''எவ்வாறு வேலை செய்கிறோம் என்பது குறித்து பொதுமக்கள் எங்களை அங்கீகரிக்க வேண்டும். பத்திரிகைத் துறையைப் பற்றி பொதுமக்களுக்கு வெளிப்படுத்தும் வாய்ப்பை நாங்கள் பயன்படுத்த விரும்புகிறோம்.  ஏனெனில், வாய்ப்பை வெளிக்கொணர்வதைத் தவிர்த்து செய்திகளை எவ்வாறு நேர்மறையாகப் பார்ப்பது என்பது பற்றிய விழிப்புணர்வையும் வழங்க விரும்புகிறோம்'' என்றார் அவர்

இன்று, பெர்னாமா தொலைக்காட்சியின் Apa Khabar Malaysia நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அவர் அத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். 

-- பெர்னாமா 


பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)