லாருட், 03 அக்டோபர் (பெர்னாமா) -- சிசுவின் சடலத்தை ஆற்றங்கரையில் வீசிய கம்போடியா மற்றும் நேபாள தம்பதியரை போலீசார் கைது செய்ததாக தைப்பிங் மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் நசீர் இஸ்மாயில் தெரிவித்தார்.
தைப்பிங் சிம்பாங், லாருட் ஆற்றங்கரையில் நேற்று முன்தினம் பிறந்த பெண் குழந்தையின் சடலத்தை போலீசார் கண்டெடுத்தனர்.
தைப்பிங் மருத்துவமனை அவசரப் பிரிவில் இருந்து 43 வயதான கம்போடியர் ஒருவர் அதிகாலை 3.32 மணிக்குப் அக்குழந்தையைப் பிரசவித்ததாக போலீசாருக்கு புகார் கிடைத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து அத்தம்பதியிர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றவியல் சட்டம் செக்ஷன் 318-இன் கீழ் அவர்கள் மீது விசாரணை நடத்தப்படும்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஈராண்டுகள் சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்று முகமட் நசீர் இஸ்மாயில் கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)