மைடுகுரி, 03 அக்டோபர் (பெர்னாமா) - வடக்கு நைஜீரியாவில் படகு மூழ்கியது குறைந்தது 60 பேர் நீரில் மூழ்கியதாக அந்நாட்டு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நேற்று மத பண்டிகையில் கலந்து கொண்டு வீடு திரும்பும் பெண்களை மற்றும் குழந்தைகளை ஏற்றிச் சென்ற போது அப்படகு கவிழ்ந்தது.
மொக்வா உள்ளூர் அதிகார சபையின் தலைவர் ஜிப்ரில் அப்துல்லாஹி மு கூறுகையில், கபாஜிபோ குடியிருப்புக்கு அருகிலுள்ள நைஜர் ஆற்றில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.
இதில் படகில் சுமார் 300 பேர் பயணித்தனர்.
இதுவரை 160 பயணிகள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)