பாகிஸ்தான், 07 அக்டோபர் (பெர்னாமா) -- கராச்சியில், உள்ள அனைத்துலக விமான நிலையத்திற்கு அருகே ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் குறைந்தது இருவர் உயிரிழந்தனர்.
மேலும், எண்மர் காயத்திற்கு ஆளாகினர்.
காயமடைந்தவர்களில் ஒருவர் வெளிநாட்டவர் ஆவார்.
வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து, கார்கள் தீப்பிடித்து எரிவதையும், அவசரகால பணியாளர்கள் காயம் அடைந்தவர்களுக்கு உதவி செய்வதையும் காண முடிந்தது.
இந்த வெடிப்பு சம்பவத்திற்கு பிரிவினைவாத போராளிக் குழுவான பலூச் விடுதலை இராணுவம், பி.எல்.ஏ பொறுப்பேற்றுள்ளது.
பொறியாளர்கள் உட்பட சீனப் பிரஜைகளைக் குறிவைத்து மேம்பட்ட வெடிக்கும் கருவியைப் பயன்படுத்தி தாங்கள் இத்தாக்குதலை நடத்தியதாக அக்குழு குறிப்பிட்டுள்ளது.
பாகிஸ்தானின் தென்மேற்கிலும் ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் எல்லையிலும் அமைந்துள்ள பலுசிஸ்தான் மாகாணத்திற்கு பி.எல்.ஏ சுதந்திரம் கோருகிறது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)