குவாஹாத்தி, 7 அக்டோபர் (பெர்னாமா) -- இமயமலையில் இருந்து வந்த வேகமான நீரோட்டத்தினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால், இந்தியா மற்றும் வங்காளதேசத்தில் குறைந்தது 20 பேர் உயிரிழந்தனர்.
இம்மாதம் நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் தொடர்ச்சியாக இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அங்கு ஏற்பட்ட வெள்ளத்தினால், குறைந்தது 225 பேர் பலியாகியதோடு, இந்தியா மற்றும் வங்காளதேசத்தில் உள்ள ஆறுகளிலும் நீர் பெருக்கெடுத்து ஓடியது.
தெற்காசியாவில் ஜூன் முதல் செப்டம்பர் வரையில் ஏற்படும் மழைக்காலத்தில், வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஒரு பொதுவான நிகழ்வாகும்.
ஆனால், பருவநிலை மாற்றத்தினால் நிலைமை மேலும் மோசமடைந்துள்ளதாக வானிலை நிபுணர்கள் கூறியுள்ளனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)