உலகம்

லெபனானிலும் கொடூர தாக்குதல்களை மேற்கொள்ளும் இஸ்ரேலுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

10/10/2024 07:32 PM

ஜெருசலம், 09 அக்டோபர் (பெர்னாமா) -- காசாவில் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கைகளைப் போன்று லெபனானிலும் கொடூர தாக்குதல்களை மேற்கொள்ளக் கூடாது என்று இஸ்ரேலுக்கு அமெரிக்கா நேற்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

காசாவை போன்று லெபனானை அழிக்கவிருப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு அச்சுறுத்தியதால், அமெரிக்கா அந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

இருப்பினும் ஹிஸ்புல்லா மீது குண்டுகள் பொழியப்படும் என்று இஸ்ரேல் இராணுவத் தலைவர் கூறினார்.

நெதன்யாஹுவுக்கும்  அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கும் இடையிலான தொலைப்பேசி உரையாடல் நிறைவடைந்த பின்னர் அமெரிக்கா அறிக்கை வெளியிட்டுள்ளது.

இருப்பினும் அவ்விரு தலைவர்களின் தொலைப்பேசி உரையாடல் குறித்து விரிவான அறிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை.

தற்போது இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை மேற்கொண்டு வருவதால் இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)