ஈப்போ, 11 அக்டோபர் (பெர்னாமா) -- Lingkaran Tengah Utama LTU எனும் நெடுஞ்சாலையில் கூடிய விரையில் அமைக்கப் படவிருக்கும் R&R ஓய்வு தளத்திற்கு பொதுப்பணி அமைச்சு இரண்டு கோடி ரிங்கிட் ஒதுக்கீட்டு நிதியை விண்ணப்பம் செய்யும்.
நெடுஞ்சாலையின் இருப்புறங்களிலும் R&R ஓய்வு தளத்தை அமைப்பதற்கு அந்நிதி பயன்படுத்தப்படும் என்று பொதுப்பணி துணை அமைச்சர் டத்தோ ஶ்ரீ அஹ்மட் மஸ்லான் தெரிவித்தார்.
''R&R ஓய்வு தளத்தில், சில கடைகள், கழிவறைகள், தொழுகைக்கான இடங்கள் அமைக்கப்படவுள்ளது. ஏனெனில் பகாங் மாநில அரசாங்கம் உட்பட அங்குள்ள மக்களால் எழுப்பப்பட்ட அவசரத் தேவைகள் இதுவாகும்'', என்று அவர் கூறினார்.
இன்று, பேராக்கின் ஜாலான் சிம்பாங் பூலாய் - புலூ வேல்லிக்கு அருகில் ஏற்பட்ட மண் சரிவு மற்றும் சாலை மறுசீரமைப்பு திட்டத்தைப் பார்வையிட்ட பின்னர் அவர் செய்தியாளர்களிடம் அதனை தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)