பொது

தாமான் மெலாவாத்தி நிலச்சரிவு; வீடுகள் & சொத்துடமைகள் குறித்து கவலை வேண்டாம்

17/10/2024 07:23 PM

கோலாலம்பூர், 17 அக்டோபர் (பெர்னாமா)  - 'Taman Melawati, ஜாலான் E6-ரில் நிகழ்ந்த நிலச்சரிவைத் தொடர்ந்து தற்காலி நிவாரண மையம் PPS-க்கு அனுப்பப்பட்ட குடியிருப்பாளர்கள் தங்களது வீடுகள் மற்றும் சொத்துடமைகளின் பாதுகாப்பு குறித்து கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.

உயிரிழப்புகள் மற்றும் எதிர்பாரா சம்பவங்கள் நிகழாமல் இருப்பதைத் தடுக்க பாதிக்கப்பட்ட குடியிருப்பு பகுதிகளில் போலீசார் அவ்வப்போது ரோந்து மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹுசேன் ஒமார் கான் தெரிவித்தார்.

இன்று வியாழக்கிழமை சம்பவ இடத்தில் செய்தியாளர்களை சந்தித்த டத்தோ ஹுசேன் இத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)