புத்ராஜெயா, 23 அக்டோபர் (பெர்னாமா) -- 2012-ஆம் ஆண்டு பாதுகாப்பு குற்றங்களுக்கான சிறப்பு நடவடிக்கை சட்டம் சொஸ்மாவின் கீழ் கைது செய்யப்பட்டு இன்னும் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படாத, GISB குழும நிறுவனத்தின் 30-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களுக்கு எதிராக போலீசார் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக டான் ஶ்ரீ ரசாருடின் தெரிவித்தார்.
இவ்விவகாரம் தொடர்பில் மேலும் பலர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுவதற்கான சாத்தியக் கூறுகளை அவர் நிராகரிக்கவில்லை.
அதுமட்டுமின்றி, GISBH-உடன் தொடர்புடைய நபர்களைப் போலீசார் இன்னும் தேடி வருவதாகவும் அவர் கூறினார்.
இதுவரை சொஸ்மாவின் கீழ் கைது செய்யப்படுள்ள 60 பேரில் 22 பேர் இன்று செலாயாங் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)