சிலாங்கூர், 25 அக்டோபர் (பெர்னாமா) -- பலத்த காற்றினால், பண்டார் புஞ்சாக் அலாமில், இகோன்சேவ் பேரங்காடியின் கார் நிறுத்தும் இடத்தில் 100x20 சதுர அடியிலான பெரிய பெயர் பலகை ஒன்று விழுந்து ஆறு வாகனங்கள் சேதமடைந்தன.
இன்று மதியம் நிகழ்ந்த இச்சம்பவத்தில், பாதுகாப்பை உறுதிசெய்ய FRT-இன் ஐந்து உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக பெஸ்தாரி ஜெயா தீயணைப்பு மற்றும் மீட்புப் படையின் நடவடிக்கை பிரிவு கமாண்டர், இரண்டாவது மூத்த தீயணைப்புப் படை அதிகாரி கமாருல் அனுவார் இஸ்னாவான் தெரிவித்தார்.
இச்சம்பவத்தில் யாருக்கும் பலத்த காயம் எதுவும் ஏற்படவில்லை.
எனினும், சேதமடைந்த வாகனங்களில் ஒன்றின் உரிமையாளரான 45 வயதுடைய பெண் ஒருவர் அதிர்ச்சிக்கு ஆளானதோடு, காரிலிருந்து வெளியேற்றப்பட்டு மேல் சிகிச்சைக்காக அருகில் உள்ள சிகிச்சையகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
தீயணைப்பு படையினர் சம்பந்தப்பட்ட இடத்தை சுத்தப்படுத்தியதோடு பொது மக்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தினர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)