தெஹ்ரான், 26 அக்டோபர் (பெர்னாமா) -- ஈரான் இராணுவத் தளங்கள் மீது துல்லியமான தாக்குதல்களை இஸ்ரேல் இராணுவம் துவங்கியுள்ளது.
இதனால் அவ்விரு நாடுகளுக்கு இடையிலான போர் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது.
இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வரும் ஈரானுக்குப் பாடம் புகட்டவே, அந்நாட்டின் இராணுவத் தளங்கள் மீது குறிவைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் கூறியது.
தெஹ்ரான், மேஷெட் மற்றும் காராஜில் உள்ள மின் நிலையம் மீது இஸ்ரேலிய வான் படைகள் குண்டுகளைப் பொழிந்தன.
தாக்குதல் தீவிரமடைந்துள்ளதால், பொது மக்கள் பாதுகாப்பாக இருக்கும் படி தெஹ்ரான் அறிவுறுத்தியுள்ளது.
கிளர்ச்சி அமைப்புகளுக்கு ஆதரவு அளித்து வரும் ஈரான், ஏப்ரல் மாதம் இஸ்ரேல் மீது இரு முறை ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
அந்த தாக்குதல் முறியடிக்கப்பட்டாலும், ஏவுகணை தாக்குதலுக்குத் தக்க பதிலடி கொடுக்கும் வகையில், ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)