தவாவ், 27 அக்டோபர் (பெர்னாமா) -- நேற்று நள்ளிரவு சபா, தவாவில் உள்ள கம்போங் கினாபுத்தான் குடியிருப்புப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 40 வீடுகள் தீக்கிரையாகின.
இச்சம்பவத்தில் சிறுவன் ஒருவன் உயிரிழந்தான்.
வீடுகள் நெருக்கமாக இருந்த காரணத்தினால் தீ மிக வேகமாக பரவியது.
இதனால் முக்கிய ஆவணங்கள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைக் கைப்பற்ற முடியாமல் போனது.
அதிகாலை 4.50 மணியளவில் உடல் கருகி மாண்ட ஐந்து வயது சிறுவன் கண்டெடுக்கப்பட்டதாகவும், பின்னர் அச்சிறுவனின் நல்லுடல் மேல் நடவடிக்கைக்காக போலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் தாவாவ் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் தலைவர் ஜெமிஷின் உஜின் கூறினார்.
தீ விபத்து ஏற்படுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், இருள் காரணமாக தமது பேரன் அறையில் இருந்ததை உணரவில்லை என்று, அச்சிறுவனின் தாத்தா முகமது தாஹிர் நபில் தெரிவித்தார்.
தனது பேரனைக் காப்பாற்றுவதற்காக தீயை அணைக்க முற்பட்ட வேளை, தீ மிக வேகமாக பரவி பத்து நிமிடங்களுக்குள் வீட்டை முழுமையாக அழித்தாக அவர் கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)