பொது

அரசு சாரா நிறுவனங்கள் ஏற்பாடு செய்த கூட்டம் தொடர்பில் போலீஸ் விசாரணை

27/10/2024 06:48 PM

தெலுக் இந்தான், 27 அக்டோபர் (பெர்னாமா) -- நேற்று தெலுக் இந்தான் சாய்ந்த கோபுர சதுக்கத்தில், அரசு சாரா நிறுவனங்கள் ஏற்பாடு செய்த பேரணி தொடர்பாக போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகிறது. 

அப்பேரணி குறித்து சம்பந்தப்பட்ட தரப்பினர், போலீஸ் தரப்பிடம் தெரிவிக்கவில்லை என்று பேராக் மாநில போலீஸ் தலைவர் டத்தோ அசிசி மட் அரிஸ் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

அதன்படி, 2012-ஆம் ஆண்டு அமைதி பேரணி சட்டம், செக்‌ஷன் 9, உட்பிரிவு ஒன்றின் கீழ் போலீசார் இந்த வழக்கை விசாரித்து வருவதாகவும், தொடர் விசாரணைக்காக, விசாரணைக்கான உத்தரவு, OTI கோரப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

விசாரணை அறிக்கையை நிறைவு செய்ய, சம்பந்தப்பட்ட தரப்பினர் வாக்குமூலத்தை வழங்க அழைக்கப்படுவார்கள்.

ஜாலூர் கெமிலாங்கைப் பறக்கவிடும் அப்பேரணியில், சுமார் 400 பேர் கலந்து கொண்டனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30  (ஆஸ்ட்ரோ 502)