பெஷாவர், 28 அக்டோபர் (பெர்னாமா) -- மேற்கு பாகிஸ்தானில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் எண்மர் கொல்லப்பட்டனர்.
மேலும் ஐவர் காயமடைந்தனர்.
கைபர் பக்துன்க்வாவில் உள்ள மிர் அலி எனும் நகர் அருகே இச்சம்பவம் நிகழ்ந்ததாக அடையாளம் தெரிவிக்க மறுத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
"இத்தாக்குதலில் போலீஸ் அதிகாரிகள் நால்வரும் துணை இராணுவத்தைச் சேர்ந்த இரு உறுப்பினர்களும் உயிரிழந்தனர்.
"காயமடைந்த மூவரின் கவலைக்கிடமாக உள்ளது. அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்," அவர் கூறினார்.
இத்தாக்குதலுக்கு அஸ்வாட் உல் ஆர்ப் எனும் கிளர்ச்சி படை பொறுப்பேற்றுள்ளது.
2021-ஆம் ஆண்டு தொடங்கி ஆப்கானிதாஸ்னில் தலிபான் ஆட்சி செய்தத் தொடங்கியதில் இருந்து பாகிஸ்தானில் கிளர்ச்சி படைகளின் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)